செய்திகள்
பெண் டாக்டர் தற்கொலை

ராமநாதபுரம் அருகே கணவர் சித்ரவதையில் பெண் டாக்டர் தற்கொலை

Published On 2021-11-12 07:01 GMT   |   Update On 2021-11-12 07:01 GMT
ராமநாதபுரம் அருகே வேலைக்கு போகக் கூடாது என்று என்று கணவர் சித்ரவதை செய்ததில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர் சுகந்தா வயது (31).

இவருக்கும் ராமநாதபுரம் அருகே உள்ள சடையன் வலசை கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் மகேஸ்வரன் மேல் மருத்துவ படிப்புக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும், பின்பு ஊர் வந்து சுகந்தாவை ஒரு மாதம் விடுப்பு எடுக்க சொல்லி டெல்லிக்கு அழைத்துச் சென்றார். கடந்த மாதம் அக்டோபரில் ராமநாதபுரம் வந்து பெரியார் நகரில் வாடகைக்கு வீடு பிடித்து டாக்டர்கள் இருவரும் தங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அடிக்கடி சுகந்தா அவரது தாயார் சரஸ்வதிக்கு போன் செய்து தன்னை கணவர் வேலைக்கு போகக் கூடாது என்றும் மேல் படிப்புக்கு செல்லக்கூடாது என்றும், அடிக்கடி அடித்து மிரட்டி துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுகந்தா தனது கணவர் கொடுமை தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கிய அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

டாக்டர் மகேஸ்வரனை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு சுகந்தாவின் தாய் சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் பஜார் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.

Tags:    

Similar News