செய்திகள்
கொள்ளை

ஆழ்வார்திருநகரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2021-11-08 10:03 GMT   |   Update On 2021-11-08 10:03 GMT
ஆழ்வார்திருநகரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் கணேசன். டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சிதம்பரத்துக்கு சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கணேசன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை சுருட்டி சென்றனர்.

இதுகுறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் காட்டுர் சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் சலாவுதீன் (25).இவர் இரவு கடையை மூடி விட்டு சென்றார். மறுநாள் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ‌ஷட்டர் திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ. 11 ஆயிரத்து 600 ரூபாய் திருடு போயிருப்பது தெரிந்தது.

Tags:    

Similar News