செய்திகள்
அரசு தேர்வுகள் இயக்ககம்

தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

Published On 2021-11-07 12:55 GMT   |   Update On 2021-11-07 12:55 GMT
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. உபரி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்தார்.
Tags:    

Similar News