செய்திகள்
2, 3-ந்தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு
மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவைகள் நாளை மற்றும் நாளை மறுநாளும் செயல்படுத்தப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெரிசல் மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்கள் நாளை (2-ந்தேதி) மற்றும் 3-ந்தேதி மட்டும் இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளையும், நாளை மறுநாளும் இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும்.
மேற்கண்ட மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவைகள் நாளை மற்றும் நாளை மறுநாளும் செயல்படுத்தப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை