செய்திகள்
வெள்ளகோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
வழிபாட்டில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில், திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.