செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே வீட்டை விற்க மறுத்த மனைவியை வெட்டிய கணவர் கைது

Published On 2021-10-22 11:05 GMT   |   Update On 2021-10-22 11:05 GMT
திருவள்ளூர் அருகே வீட்டை விற்க மறுத்த மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). இவர் தபால் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் விஜயகுமார் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்று விடலாம் என்று தன்னுடைய மனைவி கலையரசி (59) யிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் வீட்டை விற்க மறுப்பு தெரிவித்த தன்னுடைய மனைவியை தகாத வார்த்தையால் பேசி காய்கறி வெட்டும் கத்தியால் அவரது இடது கை மற்றும் தாடையில் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News