செய்திகள்
கைது

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

Published On 2021-10-19 11:29 GMT   |   Update On 2021-10-19 11:29 GMT
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55), தொழிலாளி. இவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியிடம் அடிக்கடி அன்பாக பேசுவது போல் பேசி பழகி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பயந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து, நேற்று ஜெயபாலை கைது செய்தனர். பின்னர் அவரை நாங்குநேரி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News