செய்திகள்
கோப்புபடம்

தீபாவளி கூட்ட நெரிசல் - தங்க நகைகளை தவிர்க்க போலீசார் வேண்டுகோள்

Published On 2021-10-16 11:01 GMT   |   Update On 2021-10-16 11:01 GMT
தனியாக செல்லும் போது விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
வெள்ளகோவில்:

பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் வெள்ளகோவில் பகுதியில் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் போதும், கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களுக்கு செல்லும் போதும், தனியாக செல்லும் போதும் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். 

வெள்ளகோவில் பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்த நபர்கள், பிற மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் பெண்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்து கொள்ள உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News