செய்திகள்
பல்லடத்தில் இயற்கை பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீ விபத்தில் மாட்டிக்கொண்டால் அவரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.
மாடியில் ஒருவர் தீ விபத்தில் மாட்டிக்கொண்டால் அவரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். இதில் பல்லடம் தாசில்தார் தேவராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் தாலுகா அலுவலக பணியாளர்கள், பல்லடம் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.