செய்திகள்
நிழற்குடை இல்லாத பஸ் நிலையம்.

முக்கோணம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் தவிக்கும் பயணிகள்

Published On 2021-10-11 07:29 GMT   |   Update On 2021-10-11 07:29 GMT
முக்கோணம் பஸ் நிறுத்தம் சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கியமான சந்திப்பாக உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
 உடுமலை:


பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முக்கோணம் சந்திப்பு. உடுமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியின் வழியாக ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 

இதனால் ஏராளமான பொதுமக்கள் முக்கோணம் சந்திப்புக்கு வந்து பொள்ளாச்சி, கோவை, ஆனைமலை, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கும் அருகில் உள்ள ஊராட்சிகளுக்கும் சென்று வருகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாததால் பொதுமக்கள் இயற்கை  சீற்றங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

சுற்றுப்புற கிராமங்களுக்கு இந்த பகுதி முக்கியமான சந்திப்பாக உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மணிக்கணக்கில் கால் கடுக்க நிற்க வேண்டி உள்ளது. மேலும் வெயில்,மழை போன்ற இயற்கை சீற்றங்களும் பொதுமக்களை தாக்கி வருகிறது.

சாலையின் ஓரங்களில் நின்றுள்ள பொதுமக்கள் மீது வழியாக வருகின்ற வாகனங்கள் நிலைதடுமாறி மோதுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பஸ்சுக்காக காத்துக்கொண்டுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. 

எனவே பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு முக்கோணம் சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News