செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 479 கன அடியாக சரிவு
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
ஒகேனக்கல்லில் இன்று 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 16 ஆயிரத்து 163 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரத்து 479 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 80.31 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து 81.47 அடியானது.
இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
ஒகேனக்கல்லில் இன்று 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 16 ஆயிரத்து 163 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரத்து 479 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 80.31 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து 81.47 அடியானது.
இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.