செய்திகள்
பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நச்சலூர்:
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் குளித்தலை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இனுங்கூர் காசாகாலனி பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 62). தனது பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.