செய்திகள்
மனு கொடுக்க வந்த விவசாயிகள்.

தாட்கோ கடன் கேட்டு விவசாயிகள் மனு

Published On 2021-10-08 08:43 GMT   |   Update On 2021-10-08 08:43 GMT
தாட்கோ மூலம் விவசாயிகள் பயன் பெற வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சாளரப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாட்கோ மேலாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். 

அதில், தாட்கோ மூலம் விவசாயிகள் பயன் பெற வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. எங்கள் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வாங்குதல் மற்றும் இருக்கும் கால்நடைகளை  பராமரிக்க தாட்கோ மூலம் வங்கி கடன் பெற்று வந்தனர்.

தற்போது கடன் வழங்கப்படாததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 
Tags:    

Similar News