செய்திகள்
கோப்புபடம்

அவினாசியில் இடிந்து விழுந்த வீட்டை அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-10-06 08:58 GMT   |   Update On 2021-10-06 08:58 GMT
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு அவினாசி சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்தது.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் செம்பியநல்லூர் ஊராட்சி கந்தம்பாளையம் எ.டி.காலனியை சேர்ந்தவர் பட்டான் ( வயது 65). இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு அவினாசி சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்தது.

இதில் பட்டான் வீட்டின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பட்டான் மற்றும் அவரது மகள் கருணாம்பாள் (21) ஆகியோர் வீட்டின் அறைக்குள் இருந்ததால் உயிர் தப்பினர். 

இந்தநிலையில் தனக்கு மாற்றுவீடு கட்டித்தர வேண்டி பட்டான் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து வருவாய் துறையினர் இடிந்து விழுந்த வீட்டை ஆய்வு செய்தனர். 
Tags:    

Similar News