செய்திகள்
பிரியங்கா காந்தி கைதை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்லடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
உத்தரப்பிரதேசத்தில் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்தும் விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழகம் முழுவதும் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் கோஷம் எழுப்பினர். பல்லடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே திடீரென கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரசார் சாலை மறியல் செய்தனர். அவர்களை பல்லடம் போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.