செய்திகள்
மறியலில் ஈடுபட்டபொதுமக்கள்.

பல்லடம் அருகே கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-10-02 09:57 GMT   |   Update On 2021-10-02 09:57 GMT
பல்லடம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சுமார் 50 - க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி கிராம சபை நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட வெங்கடாபுரம் பகுதி பொதுமக்கள் தங்களது பகுதிக்கு சரியான அளவு குடிநீர் வருவதில்லை என்றும் பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பல்லடம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 
Tags:    

Similar News