செய்திகள்
வழக்கு பதிவு

ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தல் விதி மீறியதாக 2 வேட்பாளர் மீது வழக்கு

Published On 2021-10-01 10:13 GMT   |   Update On 2021-10-01 10:13 GMT
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை அனுமதியின்றி சுவரொட்டிகளில் ஒட்டி விளம்பரம் செய்திருந்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தேர்தல் விதிமீறல் குறித்து வேட்பாளர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அரசு ரோந்து பணியில் இருந்தார்.

அப்போது அங்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை அனுமதியின்றி சுவரொட்டிகளில் ஒட்டி விளம்பரம் செய்திருந்தனர். இதனை பார்த்த போலீசார் தேர்தல் விதி மீறியதாக 2 வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News