செய்திகள்
கொரடாச்சேரியில் முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
கொரடாச்சேரியில் முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி போலீஸ் சரகம் பத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது74). சம்பவத்தன்று இவர் கொரடாச்சேரி கடைவீதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் ஹரிஹரனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிஹரனிடம் இருந்த ரூ.200-ஐ பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஹரிஹரன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விடயபுரமத்தை சேர்ந்த முத்துக்குமார் (40), மஞ்சக்கொல்லையை சேர்ந்த அருள்தேவன் (34) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.