செய்திகள்
கோப்புபடம்

மூலனூர், கன்னிவாடி பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-09-27 08:27 GMT   |   Update On 2021-09-27 08:27 GMT
மூலனூர் பகுதியில் அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சி காட்டுவலசு, வெங்கிக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
தாராபுரம்:

தாராபுரம் மின்சார வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் அதன் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

எனவே இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

அதன்படி மூலனூர் பகுதியில் அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சி காட்டுவலசு, வெங்கிக்கல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கா நாயக்கன்பட்டி, பெரமியம், கிளாங்குண்டல், பெருமாள்புதூர் ஆகிய பகுதிகளில்  மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மேலும் கன்னிவாடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும்  மாலமேடு, அரிக்காரன் வலசு, ஆய்க்கவுண்டம்பாளையம், கன்னிவாடி, நஞ்சை தலையூர், புஞ்சை தலையூர், மணலூர், பெருமாள் வலசு உள்ளிட்ட பகுதிகளிலும் மின் வினியோகம் தடை செய்யப்படும் என தாராபுரம் கோட்ட மின்வாரிய நிர்வாக செயற்பொறியாளர் பாலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News