செய்திகள்
தற்கொலை

கல்லூரியில் விரும்பிய பாடம் படிக்க முடியாததால் மாணவி தற்கொலை

Published On 2021-09-22 10:49 GMT   |   Update On 2021-09-22 10:49 GMT
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் கல்லூரியில் விரும்பிய பாடம் படிக்க முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நஷீர் அகமது. இவரது மகள் தமன்னா ஆசித் (வயது 18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பாடம் படிக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை நீ குறைந்த மார்க் எடுத்துள்ளதால் அந்த படிப்பு கிடைக்காது என்று கூறி உள்ளார்.

இதனால் கல்லூரியில் தான் நினைத்த பாடம் படிக்க முடியவில்லையே என்று நினைத்த தமன்னா ஆஷித் மனம் உடைந்தார். பின்னர் நேற்று வீட்டில் இருந்த கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை மாணவி தமன்னா ஆஷித் இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வி‌ஷம் குடித்து இறந்த தமன்னா ஆசித்தின் தாய் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து அவரது தந்தை நஷீர் அகமது 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News