செய்திகள்
ஊரக உள்ளாட்சி தேர்தல் - அரசியல் கட்சியினர் வேட்பு மனுதாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை, 19 இடங்களுக்கு 72 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
திருப்பூர்:
உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 10 வார்டு மாவட்ட கவுன்சிலர், தாராபுரம் ஒன்றியத்தில் 12 வது வார்டு, 3 ஊராட்சி தலைவர், 14 வார்டு உறுப்பினர் உட்பட 19 பதவிகளுக்கு வருகிற 6-ந்தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை, 19 இடங்களுக்கு 72 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தற்போது தி.மு.க., அ.தி.மு.க., வின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இரு கட்சியினரும் இன்று மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் நாளை (23-ந்தேதி) பரிசீலிக்கப்பட உள்ளது.