செய்திகள்
மின்சார நிறுத்தம்

மொரப்பூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-09-20 08:48 GMT   |   Update On 2021-09-20 08:48 GMT
மொரப்பூர் பனந்தோப்பு பகுதியிலுள்ள துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
மொரப்பூர்:

மொரப்பூர் பனந்தோப்பு பகுதியிலுள்ள துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, தம்பி செட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரபட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News