செய்திகள்
கோப்புபடம்

டாஸ்மாக் பார்களில் அதிரடி ஆய்வு - 8 பேர் மீது வழக்கு

Published On 2021-09-20 08:05 GMT   |   Update On 2021-09-20 08:05 GMT
திருப்பூரில் உள்ள சில கடைகளில் சட்ட விரோத பார்கள் குறித்து ஊழியர்கள் தகவல் அளித்தனர்.
திருப்பூர்:

மதுக்கடை மேற்பார்வையாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட விரோத பார்கள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவும், தவறினால் ஊழியர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

அவ்வகையில் திருப்பூரில் உள்ள சில கடைகளில் சட்ட விரோத பார்கள் குறித்து ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதன்படி மாவட்ட மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. 

நகரில் உள்ள 24 கடைகளில் நடத்திய சோதனையில் சட்ட விரோத பார்களில் 114 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

மாவட்ட மேலாளர் கூறுகையில்;

முறைகேடான பார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இதுகுறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
Tags:    

Similar News