செய்திகள்
கொள்ளை

நன்னிலம் அருகே வீட்டின் பூட்டு உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2021-09-19 09:52 GMT   |   Update On 2021-09-19 09:52 GMT
நன்னிலம் அருகே வீட்டின் பூட்டு உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள குவளை கால் கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 35). இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக, சென்னையில் பணியாற்றிய பாலமுருகன், குவளைக் காலிலுள்ள தனது வீட்டில் இருந்தபடி, பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் பாலமுருகன் தனது குடும்பத்தாரோடு, ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த, மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தினை, கொள்ளையடித்து சென்றனர்.

இதுபற்றி தகவலறிந்த பாலமுருகன் நன்னிலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News