செய்திகள்
குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதை படத்தில் காணலாம்.

உடுமலையில் குப்பை கிடங்கு தீயால் கடும் புகைமூட்டம் - பொதுமக்கள் பாதிப்பு

Published On 2021-09-18 11:17 GMT   |   Update On 2021-09-18 11:17 GMT
போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குப்பை கிடங்கிற்கு தீ வைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி காலனி பகுதியில் உள்ள குப்பை கிடங்கு பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது. 

இதனால் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் .பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர். குப்பைக்கிடங்கு பகுதியில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து சென்று விடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் மூச்சு திணறல் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குப்பை கிடங்கிற்கு தீ வைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News