செய்திகள்
தற்கொலை

தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில்வே ஊழியர் தற்கொலை

Published On 2021-09-08 07:21 GMT   |   Update On 2021-09-08 07:21 GMT
சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த வாழவந்தாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது45). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சந்திரன் செங்கோட்டை ரெயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களாக சந்திரன் பணிக்கு செல்லாமல் குடித்து விட்டு சுற்றி திரிந்ததாகவும், அதனை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்திரன் நேற்று நள்ளிரவு செங்கோட்டை- ராஜபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த வழியாக மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற பயணிகள் ரெயில் சந்திரன் மீது ஏறியது. இதில் சந்திரன் உடல் சிதறி பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News