செய்திகள்
தற்கொலை செய்த பொன்னுச்சாமி சுமதி இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை தற்கொலை

Published On 2021-09-05 10:43 GMT   |   Update On 2021-09-05 10:43 GMT
கோவையில் தங்கியிருந்து படித்து வந்த ஜனனி பெற்றோருக்கு தெரியாமல் அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார்.
குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பொலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). இவரது மனைவி சுமதி (58). இவர்களது மகள் ஜனனி (22). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார்.  

ஜனனி ஒரே மகள் என்பதால் பொன்னுச்சாமியும் அவரது மனைவியும் மிகவும் செல்ல மாக வளர்த்து வந்தனர். கோவையில் தங்கியிருந்து படித்து வந்த  ஜனனி பெற்றோருக்கு தெரியாமல் அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார்.  

அந்த புகைப்படத்தை நேற்று பொன்னுச்சாமியின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினார். அதனைப்பார்த்த பொன்னுச்சாமியும், சுமதியும்  அதிர்ச்சியடைந்தனர். செல்லமாக வளர்த்த ஒரே மகள் இப்படி செய்து விட்டாளே? என்று எண்ணி மிகவும் மனமுடைந்தனர். 

இது பற்றி அக்கம்பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறி தேற்றினர். இருப்பினும் 2 பேரும் மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்டனர். 

இந்தநிலையில் இன்று காலை பொன்னுச்சாமியின் வீடு  நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி அழைத்தனர். இருப்பினும் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது பொன்னுச்சாமியும், சுமதியும் தூங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது பற்றி உடனடியாக  குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் 2 பேரும் வாழைப்பழத்தில் விஷத்தை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது-.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News