செய்திகள்
சட்ருட்டி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

மன்னார்குடி சட்ருட்டி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

Published On 2021-08-31 14:22 GMT   |   Update On 2021-08-31 14:22 GMT
மன்னார்குடி நகரின் முக்கிய வடிகால் வாய்க்கால் சட்ருட்டி வாய்க்கால் ஆகும். நகரின் மழை நீர் வடிவதற்கு இந்த வாய்க்கால் தான் வடிகாலாக இருந்து வருகிறது.
மன்னார்குடி:

மன்னார்குடி நகரின் முக்கிய வடிகால் வாய்க்கால் சட்ருட்டி வாய்க்கால் ஆகும். நகரின் மழை நீர் வடிவதற்கு இந்த வாய்க்கால் தான் வடிகாலாக இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மழைநீர் சரியாக வடியாமல் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் நிலை இருந்தது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி சார்பில் பொக்லின் எந்திரம் மூலம் சட்ருட்டி வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News