செய்திகள்
முத்துப்பேட்டை அருகே மது விற்றவர் கைது
முத்துப்பேட்டை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை தெற்குக்காடு பகுதியில் மது பாட்டில்களை வாங்கி வந்து ஒருவர் கூடுதல் விலைக்கு விற்பதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு அப்பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்த ராஜமாணிக்கம்(வயது69) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.