செய்திகள்
நாங்குநேரி அருகே விபத்து- கல்லூரி மாணவர் பலி
நாங்குநேரி அருகே தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
விருதுநகரை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் விமல் (வயது 21). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த செல்வா. கல்லூரி மாணவர்களான இவர்கள் விருதுநகரில் இருந்து கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் மீண்டும் விருதுநகருக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை விமல் ஓட்டிச்சென்றார். இன்று அதிகாலை நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர் பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் தடுப்பு சுவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விமல் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணையில் தூக்க கலக்கத்தில் தடுப்பு சுவரில் மோதியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் விமல் (வயது 21). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த செல்வா. கல்லூரி மாணவர்களான இவர்கள் விருதுநகரில் இருந்து கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் மீண்டும் விருதுநகருக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை விமல் ஓட்டிச்சென்றார். இன்று அதிகாலை நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர் பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் தடுப்பு சுவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விமல் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணையில் தூக்க கலக்கத்தில் தடுப்பு சுவரில் மோதியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.