செய்திகள்
கொள்ளை

தஞ்சையில் போலீஸ்காரர் வீட்டில் ரூ.5 லட்சம்-15 பவுன் நகை திருட்டு

Published On 2021-08-24 09:36 GMT   |   Update On 2021-08-24 09:36 GMT
தஞ்சையில் போலீஸ்காரர் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பூக்கார தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 50). இவர் சென்னையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

இவருக்கு தஞ்சை பூக்கார தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. மேலும் புதிய வீட்டுவசதி வாரியத்தில் ஒரு வீடு கட்டி நேற்று முன்தினம் கிரகபிரவேசம் நடந்தது. நேற்று அந்த வீட்டிலேயே குடும்பத்துடன் தங்கினார்.

இன்று காலை பூக்கார தெருவில் உள்ள வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், 15 பவுன் தங்க நகை ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News