செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-08-23 11:11 GMT   |   Update On 2021-08-23 11:11 GMT
மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:

திருப்பூரில் ஓ.எச்.டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர், தூய்மை காவலர்கள் ஆகியோரின் பல்வேறு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களை ஊராட்சி ஊழியர்களாக்கி ஊதியம் வழங்க வேண்டும் , 7-வது ஊதிய குழு பரிந்துரை ஊதியம், நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு அரசு அறிவித்துள்ள அரசாணையின்படி கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தூய்மைப்பணியாளர்களுக்கும் தூய்மை காவலர்களுக்கும் உபகரணங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News