செய்திகள்
கொள்ளை

வல்லத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகைகள்-பணம் திருட்டு

Published On 2021-08-22 09:37 GMT   |   Update On 2021-08-22 09:37 GMT
தஞ்சை அடுத்த வல்லத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த கேமரா மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் நல்லதண்ணீர் கிணறு ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 24). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெங்கடேஷ் அவருடைய குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் சுற்றுலா சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். வெங்கடேஷ் அவர் குடியிருந்து வரும் வீட்டின் மாடிக்கு பகுதிக்கு சென்றபோது வீட்டில் இருந்து 4 நபர்கள் பின்புறமாக ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளனர். உடனே வீட்டினுள் சென்று பார்த்த வெங்கடேஷ் பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் செயின் உள்பட 5 ½ பவுன் நகைகள், விலை உயர்ந்த கேமரா மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வல்லம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News