செய்திகள்
வழக்கு பதிவு

ஜோலார்பேட்டை அருகே அடிதடி வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-08-14 12:48 GMT   |   Update On 2021-08-14 12:48 GMT
ஜோலார்பேட்டை அருகே அடிதடி வழக்கில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த அடியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோகரன் (வயது 55). இவரின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (40) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தில் பொதுவழி தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 11-ந்தேதி நிலத்தின் பொதுவழி தகராறு சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொண்டனர். அதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் திருப்பதி (45), மனோகரன் (55), சின்னதுரை (38), லட்சுமணன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் சின்னதுரை, லட்சுமணன், காந்தி, திருப்பதி ஆகிய 4 பேர் மீதும், சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் திருப்பதி, மனோகரன், பெரியதம்பி, ஜெயபால் ஆகிய 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News