செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே கணவனின் குடிப்பழக்கத்தால் பெண் தற்கொலை

Published On 2021-08-14 09:31 GMT   |   Update On 2021-08-14 09:31 GMT
தற்கொலை செய்வதற்கு முன்பு தனது சகோதரன் சுரேஷ், சகோதரிகள் தங்கமணி, தனலட்சுமி ஆகியோரின் படங்களை வாட்ஸ்&அப் ஸ்டேட்டஸ்சில் வைத்து மிஸ் யூ என பதிவிட்டு தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலத்தை அடுத்த இடுவாய் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40). இவருக்கும் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த துளசிமணி என்பவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.

திருமணத்திற்கு பின்னர் கணவனும் மனைவியும் இடுவாய் பாரதிபுரத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனர். குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் ஆனந்தகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில்  ஈடுபட்டுள்ளார்.நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் துளசிமணியை ஆனந்தகுமார் சரமாரி தாக்கியுள்ளார். இதில் மனவேதனை அடைந்த துளசிமணி சாணிபவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு  தனது சகோதரன் சுரேஷ், சகோதரிகள் தங்கமணி, தனலட்சுமி ஆகியோரின் படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்சில் வைத்து மிஸ் யூ என பதிவிட்டு  தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மங்கலம் போலீசார் துளசிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  
இதுகுறித்து துளசிமணியின் சகோதரி தங்கமணி கூறுகையில், எனது சகோதரி துளசிமணி தற்கொலை செய்து கொண்டதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரும், மாமியாரும்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News