செய்திகள்
மரணம்

ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

Published On 2021-08-09 11:31 GMT   |   Update On 2021-08-09 11:31 GMT
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கோவை:

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News