செய்திகள்
விபத்தில் சிக்கிய லாரியையும் , பலியான பூவரசனையும் படத்தில் காணலாம்.

லாரியை கடத்தி சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி பலி

Published On 2021-07-31 09:17 GMT   |   Update On 2021-07-31 09:17 GMT
லாரியை கடத்தி சென்ற பூவரசன், போலீசில் சிக்கி கொள்ளாமல் இருக்க லாரியை வேகமாக ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
திருப்பூர்:

விழுப்புரம் மாவட்டம் சித்திரைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் பூவரசன் (வயது  21). இவர் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கூலிப்பாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடையில்  தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நள்ளிரவு கூலிப்பாளையம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியை பூவரசன் கடத்தி கொண்டு ஓட்டிச்சென்றார். எஸ்.பெரியபாளையம் பகுதியில் செல்லும் போதுபூவரசன் ஓட்டிச்சென்ற  லாரியும், எதிரே திருப்பூர் நோக்கி வந்த லாரியும் நேருக்குநேர் மோதின. இதில் பூவரசன், லாரியின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே   உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பூவரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரியை  கடத்தி சென்ற  பூவரசன், போலீசில் சிக்கி கொள்ளாமல் இருக்க லாரியை வேகமாக  ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News