செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் 2-வது ரெயில்வே கேட் நாளை முதல் மூடல்

Published On 2021-07-31 09:06 GMT   |   Update On 2021-07-31 09:06 GMT
ஊத்துக்குளி ரோட்டில் இருந்து கொங்கு மெயின்ரோடு பகுதிக்கு செல்வதற்கு இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் வாகனங்கள் சென்று வருகின்றன.
திருப்பூர்:

திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணா புரத்தில் 2-வது ரெயில்வே கேட் உள்ளது.  ஊத்துக்குளி ரோட்டில் இருந்து கொங்கு மெயின்ரோடு பகுதிக்கு செல்வதற்கு இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் 2-வது ரெயில்வே கேட் பழுது பார்த்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் வருகிற 9-ந்தேதி காலை 8 மணி வரை மூடப்படுகிறது. 

இதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என  சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News