செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஊழியர்கள்

ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.45 லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-07-29 04:08 GMT   |   Update On 2021-07-29 04:09 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.44 லட்சத்து 93 ஆயிரத்து 20, தங்கம் 94 கிராம், வெள்ளி 817 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதம்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கருட மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ரூ.44 லட்சத்து 93 ஆயிரத்து 20, தங்கம் 94 கிராம், வெள்ளி 817 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் நேற்றுதான் உண்டியல் எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News