செய்திகள்
கோப்புப்படம்

மதுக்கூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2021-07-24 10:40 GMT   |   Update On 2021-07-24 10:40 GMT
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அருகே மண்டல கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் அற்புதம் மகள் தைனீஸ் மேரி (வயது 60). இவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

உடன் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றிய புகாரின்பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News