செய்திகள்
திருட்டு

நொய்யல் அருகே 9 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2021-07-23 13:57 GMT   |   Update On 2021-07-23 13:57 GMT
நொய்யல் அருகே 9 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

நொய்யல் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதேபோல் புன்னம்சத்திரம் அருகே பொன்னையாகவுண்டன்புதூர் பகவதி அம்மன் கோவில் முன்பு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்ததை காணவில்லை. இதேபோல் நொய்யல் பகுதிகளில் 7 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்ட 9 பேரும் தனித்தனியாக வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News