செய்திகள்
மதுரையில் 17 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- வியாபாரியை போலீஸ் தேடுகிறது
மதுரையில் 17வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக தலைமறைவான வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம் (வயது 29). இவர் அந்த பகுதியில் கட்டிட பொருட்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு 17 வயது உறவுக்கார பெண் வந்தார். அப்போது பாக்கியம் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார்.
இதையடுத்து உறவினர்கள் 2 பேருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். சம்பவத்தன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாக்கியத்தை தேடி வருகின்றனர்.
மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம் (வயது 29). இவர் அந்த பகுதியில் கட்டிட பொருட்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு 17 வயது உறவுக்கார பெண் வந்தார். அப்போது பாக்கியம் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார்.
இதையடுத்து உறவினர்கள் 2 பேருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். சம்பவத்தன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாக்கியத்தை தேடி வருகின்றனர்.