செய்திகள்
தாழையூத்து அருகே மொபட் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் எட்வர்டு (வயது 62). இவர் நேற்று தாழையூத்துக்கு தனது மொபட்டில் சென்றார்.
அங்குள்ள வங்கி ஒன்றின் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற எட்வர்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மொபட்டை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.