செய்திகள்
கோப்புபடம்

துணைதாசில்தார்கள் பணியிடமாற்றம்

Published On 2021-07-15 08:45 GMT   |   Update On 2021-07-15 08:45 GMT
துணை தாசில்தார்களுக்கு நியமனம் மற்றும் மாறுதல் வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் காவல்துறை பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருந்த மண்டல துணை தாசில்தார்களுக்கு நியமனம் மற்றும் மாறுதல் வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி உடுமலை முன்னாள் மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் காவல்துறை பயிற்சி முடித்து பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றி காவல்துறை பயிற்சி நிறைவு செய்த தினேஷ்ராகவன் மடத்துக்குளம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், உடுமலை முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் விஷ்ணுகண்ணன் பயிற்சி நிறைவுக்கு பிறகு பல்லடம் மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News