செய்திகள்
கோப்புபடம்

மடத்துக்குளம் ஆலை மூலம் 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி

Published On 2021-07-15 08:35 GMT   |   Update On 2021-07-15 08:35 GMT
100 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு ஒப்பந்தம் செய்த கரும்புகளை அரைத்தனர்.

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு (2020-21) அரவைக்கு 71 ஆயிரம் டன் கரும்பு பதிவானது. இதை அடிப்படையாக வைத்து கடந்த ஏப்ரல் 16-ந்தேதி கரும்பு அரவை தொடங்கியது. தொடர்ந்து இரண்டரை மாதம் எந்திரங்களை இயக்கி பல 100 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு ஒப்பந்தம் செய்த கரும்புகளை அரைத்தனர்.

கடந்த முதல் தேதி நடப்பாண்டு அரவை நிறைவு செய்யப்பட்டு எந்திரங்கள் நிறுத்தப்பட்டன. இது குறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில் நடப்பாண்டு 63,560 டன் கரும்பு அரவை செய்து 7.88 சதவீதம் சர்க்கரை கட்டு அடிப்படையில் 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News