செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை புத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் மர்மநபர்கள் சிலர் உள்ளே புகுந்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த 4,000 பணத்தை திருடினார்கள். அதன் பிறகு கோவில் கருவறைக்குள் சென்ற மர்மநபர்கள் அம்மன் சிலையில் இருந்த 3 கிராம் தங்க நகையையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அந்த வழியாக ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்து உளுந்தூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.