செய்திகள்
கொப்பரை

கொப்பரை கொள்முதல்-விவசாயிகள் பயன்பெறலாம்

Published On 2021-07-08 08:40 GMT   |   Update On 2021-07-08 08:40 GMT
பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரிடம் பதிவு செய்யலாம்.
திருப்பூர்:

தென்னை விவசாயிகள் பயன் பெறும் வகையில் கொப்பரை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘நாபெட்’ நிறுவனம் மூலம் இதற்கான ஆதரவு விலை வழங்கி கொள்முதல் செய்யப்படுகிறது. அரவை கொப்பரை கிலோ ரூ.103.35 பந்து கொப்பரை கிலோ ரூ.106 க்கு கொள்முதல் செய்யப்படும்.

வரும் செப்டம்பர் 30-ந்தேதி வரை இந்த கொள்முதல் அமலில் இருக்கும். இதில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரிடம் பதிவு செய்யலாம்.

பொங்கலூர், காங்கயம், பெதப்பம்பட்டி, உடுமலை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News