செய்திகள்
கைது

நாமகிரிப்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2021-07-04 10:55 GMT   |   Update On 2021-07-04 10:55 GMT
நாமகிரிப்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் 2 பிரிவாக பிரிந்து சென்று பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் கட்ட புளியமரம் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பூபதி (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 24 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் புதுப்பட்டியில் உள்ள பள்ளிப்பட்டி சாலையில் சாராயம் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (35), கார்த்தி ராஜா (23) ஆகிய 2  பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News