செய்திகள்
பாபநாசம் அருகே கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது
பாபநாசம் அருகே கொத்தனாரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே ரெங்கநாதபுரம் மணக்குடி ஏரி தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30) கொத்தனார். சம்பவத்தன்று விஜய் தனது வீட்டின் சந்து பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் பாதை உருவாக்கி தண்ணீரை வெளியேற்றி அப்புறப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் தர்மராஜ் (64) தனது மகன்கள் ராஜா (36), சிலம்பரசன் (32) ஆகியோருடன் சேர்ந்து விஜயை கட்டையால் அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விஜய் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளமாறன் வழக்குப்பதிவு செய்து தர்மராஜ் அவரது மகன்கள் ராஜா, சிலம்பரசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.