செய்திகள்
உளுந்து.

ஆதார விலையில் உளுந்து கொள்முதல்-விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2021-06-23 07:24 GMT   |   Update On 2021-06-23 07:24 GMT
உடுமலை சுற்றுப்பகுதியில் உளுந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள், எண்ணை வித்துக்கள் 49 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் உடுமலை உட்பட மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. 

இச்சாகுபடிக்காக தேசிய உணவு பொருள் பெருக்கத்திட்டத்தின் கீழ் வேளாண்துறை வாயிலாக மானியமும் வழங்கப்படுகிறது.கடந்த 2019ல் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் உளுந்து  கொள்முதல் செய்யப்பட்டது.விதைப்பண்ணைக்காக பதிவு செய்தவர்களிடமிருந்து வேளாண்துறையினர் உளுந்து கொள்முதல் செய்தனர்.

தற்போது உடுமலை சுற்றுப்பகுதியில் உளுந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. எனவே ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக உளுந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News